இந்தியா மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நவம்பர் அல்லது டிசம்பரில் நடைபெறும்!: நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ் தகவல்..!! Jun 10, 2021 மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஹனுமந்த ராவ் ஹைதராபாத்: மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இறுதியிலேயே நடைபெறும் என அதன் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ் கூறியுள்ளார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கிய போதும் சுற்றுச்சுவரை தவிர வேறு எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை. புதியதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு பிரதமர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது இம்மாத இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக குழு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அந்த கூட்டத்தில் முதற்கட்டமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி அல்லது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகள் தொடங்கப்படும் என ஹனுமந்த ராவ் குறிப்பிட்டார். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்றும் அதுவரை தற்காலிகமாக உள்நோயாளிகள், புறநோயாளிகள் மற்றும் ஆய்வகம் தொடங்கப்படும் என்று ஹனுமந்த ராவ் தெரிவித்தார்.
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
காந்தி நகரில் அமித் ஷா-வை எதிர்த்து களமிறங்கிய 16 பேர் விலகல்: குஜராத் குற்றப்பிரிவு போலீஸாரே மிரட்டல் விடுத்ததாக பகீர் தகவல்
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்..!!
நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கு.. தெலுங்கானா போலீஸ் முடித்து வைத்துள்ள நிலையில் மீண்டும் விசாரிக்க முடிவு..!!
கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல்
அரசியல் தலைவர்களின் பெயர் வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு உயர்வு 28 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏன் தர வேண்டும்? ராஜீவ் பஜாஜ் காட்டம்
புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி பரிசீலனை: உச்ச நீதிமன்றம் தகவல்; 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு