சென்னை தமிழகத்துக்கு மேலும் 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது..!! Jun 10, 2021 சென்னை சென்னை: தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு போதிய தடுப்பூசிகள் அனுப்பி வைக்காததால் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி கடந்த 3 நாட்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, நெல்லை, சேலம், கோவை மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. தடுப்பூசிக்கான தொகையை ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கொடுத்த பிறகும் நேற்று வரை கூடுதல் ஊசிகள் வந்து சேரவில்லை. இந்த நிலையில், இன்று 85,000 கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்து சேர்ந்தன. இவைகள் மாவட்டங்கள்தோறும் பிரித்து அனுப்பப்படும் என்று தெரிகிறது. ஒன்றிய அரசிடம் இருந்து நேற்று வரை 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டன. இவற்றில் தமிழ்நாட்டில் 97 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார். கூடுதலாக 17 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் நேற்று குறிப்பிட்டார். கரும்பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்து 35,000 குப்பிகள் வழங்குமாறு கேட்டும் வெறும் 3,060 மட்டுமே கிடைத்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 1,052 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்