தனது குரலில் ஏமாற்றிய ரசிகருக்கு நடிகர் பிருத்விராஜ் எச்சரிக்கை

சென்னை: கிளப்ஹவுஸ் என்ற சமூக வலைத்தளத்தில், நடிகர் பிருத்விராஜ் பெயரில் போலி பக்கம் தொடங்கிய இளைஞர் ஒருவர், பிருத்விராஜ் போல் மிமிக்ரி செய்து பலரை நம்ப வைத்திருக்கிறார். இது தன் குரல் அல்ல என்று பிருத்விராஜ் சொன்ன பிறகே மற்றவர்களுக்கு இந்த விவரம் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டுள்ளார். சூரஜ் என்ற அந்த நபர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிருத்விராஜ் கூறியதாவது: இது நீங்கள் விளையாட்டாக செய்தது என்று புரிகிறது. ஆனால், இதுபோன்ற விஷயங்களுக்கு தீவிரமான பின்விளைவுகளும் ஏற்படும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். 2,500க்கும் மேற்பட்டோர் நீங்கள் பேசுவதை நான் பேசுவதாக நினைத்து கேட்டிருக்கிறார்கள்.

போனில் எனக்கு நிறைய அழைப்புகளும், மெசேஜுகளும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்ததால், உடனே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மிமிக்ரி அற்புதமான கலை. அதை தவறாகப் பயன்படுத்தாதீர்கள். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறப் பாருங்கள். இணையதளத்தில் தவறாகப் பேசுபவர்களை நான் மன்னிக்க மாட்டேன். இத்துடன் நிறுத்துங்கள். நான் கிளப்ஹவுஸ் தளத்தில் இல்லை.

Related Stories: