சென்னை: கொரோனா பர வலை அலட்சியமாக கையாண்ட தேர்தல் ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 1000 பேருக்கு, முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.200 நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினர். பின்னர், தயாநிதி மாறன் எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு மார்ச் முதல் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். அதன்படி, தற்போது 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளோம். கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.