சென்னை: பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து துறை அதிகாரிகளுடன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் காமராஜ், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் மா.மதிவாணன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநருடன், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளின் செயல்பாடுகள்,