முக்கிய செய்தி இந்தியா புனேவில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் தீ விபத்து; 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு Jun 08, 2021 புனே புனே: புனேவில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்து உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உள்ள பிரன்கட் பகுதியில் எஸ்.வி.எஸ். அக்வா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன ஆலையில் குளோரின் டை ஆக்சைடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த ஆலையில் அதிக அளவில் பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கம்பெனியில் நேற்று பிற்பகல் திடீரென ஒரு மெஷின் வெடித்து தீப்பிடித்துக்கொண்டது. இதில் ஊழியர்கள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர். தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர் உள்ளே சென்று உள்ளே சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் தீ ஆலையின் முழு பகுதியிலும் பரவ தொடங்கியது. இந்நிலையில் தீயில் சிக்கிய 18 பேரின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அதில் 15 பெண்கள் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சி தலைவர் ராஜேஷ் தேஷ்முக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒருவர் மட்டும் காயத்துடன் தப்பினார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் வழங்க துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் மோடி உரை : வாக்கு ஜிஹாத் குறித்தும் சாடல்!
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!
ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?: துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என தகவல்..!!
சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்