முக்கிய செய்தி இந்தியா கொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி ஒரே ஒரு தவறை மட்டும் காலம் தாழ்ந்து திருத்தி கொண்டுள்ளார்!: காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம்..!! Jun 08, 2021 மோடி பி. சிதம்பரம் டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளில் பிரதமர் மோடி ஒரே ஒரு தவறை மட்டும் காலம் தாழ்ந்து திருத்தி கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மாநிலங்களுக்கான தடுப்பூசியை இனி ஒன்றிய அரசே கொள்முதல் செய்து இலவசமாக வழங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறினார். இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்க்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், பிரதமர் தமது தவறுகளை எதிர்க்கட்சிகள் மீது சுமத்துவதாக குற்றம் சாட்டினார். இலவச தடுப்பூசி, ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஓராண்டாக முன்வைத்து வருவதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டார். தடுப்பூசி கொள்கையில் தற்போது ஒரே ஒரு தவறை மட்டும் மோடி அரசு திருத்தி கொண்டுள்ளதாக கூறிய ப.சிதம்பரம், தாமதமான முடிவால் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தற்போது ஒரு தவறை திருத்திக்கொண்டுள்ளார். இந்த திட்டம் செயற்பாட்டிற்கு வந்ததும் தடுப்பூசி செலுத்த எத்தனை மாதங்களாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மோடி அரசின் தொடர்ச்சியான தவறுகளால் தடுப்பூசி திட்டம் பாதிக்கப்பட்டது. தற்போது ஒரே ஒரு தவறை திருத்தி கொண்டுள்ளனர். ஆனாலும் இன்னும் நிறைய குறைகள் உள்ளன என்று தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் இரண்டை மட்டுமே ஒன்றிய அரசு ஏற்று கொண்டுள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். தடுப்பூசி கொள்கையில் செய்துள்ள மாற்றத்தை வரவேற்பதாகவும், ஆனால் பிரதமரின் தவறுகளுக்கு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட கூடாது என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் மோடி உரை : வாக்கு ஜிஹாத் குறித்தும் சாடல்!
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!