தமிழகம் சிங்கங்களுக்கு கொரோனா எதிரொலி: முதுமலை காப்பகத்தில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை..!! Jun 08, 2021 முதுமலை நீலகிரி: வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் வனத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சில நாட்களுக்கு முன்பு 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவற்றில் நீலா என்ற பெண் சிங்கம் எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இதையடுத்து தொற்று உறுதியான மற்ற சிங்கங்கள் தனித்தனியாக அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் வனத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கால்நடை மருத்துவர் ராஜேஷ், யானைகளின் தும்பிக்கையில் இருந்து சளி மாதிரிகளை சேகரித்தார். ஒரு மக்னா யானை, 6 பெண் யானைகள் உள்ளிட்ட 28 யானைகளின் சளி மாதிரிகளை மருத்துவர்கள் சேகரித்தனர். இந்த மாதிரிகளை உத்திரபிரதேசத்தில் உள்ள வன உயிரியல் ஆய்வு மையத்திற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த மாதம் பிடிபட்ட ரிவால்டோ என்ற யானைக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் முதுமலையில் வளர்ப்பு யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
நாகையில் இருந்து 13ம் தேதி போக்குவரத்து தொடக்கம் இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: தோட்டத்தில் கரிக்கட்டையாக கிடந்த உடல், எஸ்பிக்கு கடிதம் மூலம் மரண வாக்குமூலம்
அம்பேத்கர் சட்டப்பல்கலை அறிவிப்பு 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வரும் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
காங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரண பின்னணி, குற்றவாளிகளை விரைந்து கண்டறிய வேண்டும்: தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல்
கே.பி.கே.ஜெயக்குமாரும், நானும் நெருங்கிய நண்பர்கள் என் மீது பழி போடுவதற்காக யாரோ பின்புலத்தில் வேலை செய்கிறார்கள்: ரூபி மனோகரன் எம்எல்ஏ விளக்கம்
கோடை விடுமுறைக்கு வெளியூர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து கூடுதலாக 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள்: பயணிகள் உற்சாகம்