சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் 8 மேலாண் இயக்குநர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் அன்பு ஆபிராகம் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராகவும், போக்குவரத்து துறையின் தலைவர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜோசப் டயப் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக பணியாற்றி வரும் முருகேசன் சென்னை ஐஆர்டியின் கூடுதல் இயக்குநராகவும் மற்றும் பல்லவன் போக்குவரத்து கன்சல்டன்சி சர்வீஸ் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்படுகிறார்.