காயிதே மில்லத் நினைவிடம் செல்லாத இபிஎஸ், ஓபிஎஸ்: ஜெயக்குமார் தலைமையில் மரியாதை

சென்னை: காயிதே மில்லத் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இபிஎஸ், ஓபிஎஸ் சென்னையில் இருந்தும் புறக்கணித்து விட்டனர். காயிதே மில்லத் 126வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், வாலாஜா மசூதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான டி.ஜெயக்குமார் தலைமையில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா,  தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் காயிதே மில்லத் பிறந்தநாள் அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அவரது நினைவிடம் சென்று மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தப்படும். இரண்டு தலைவர்களும் நேற்று சென்னையில் இருந்தும், நினைவிடம் செல்லாமல் புறக்கணித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: