மதுரை: தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசுத்தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் உள்ள 6 மொழிகள் செம்மொழியாக தேர்வு செய்யப்பட்டன. இந்த மொழிகளிலேயே பழமையானது தமிழ் மொழி. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கு அதிகமான தமிழர்கள் உள்ளனர். ஆனால், மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கியது. சில ஆயிரம் பேர் மட்டும் பயன்படுத்தும் சமஸ்கிருத மொழிக்கு மட்டும் 3 ஆண்டுகளில் ரூ.643.85 கோடி ஒதுக்கியுள்ளது.