முக்கிய செய்தி சென்னை விசாரணை இன்னும் முடியவில்லை!: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!! Jun 05, 2021 பத்ம சேஷாத்ரி ஜாம் ராஜகோபாலன் பாக்சோ சிறப்பு நீதிமன்றம் சென்னை: சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டிருக்கிறது. அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசிரியராக இருந்த ராஜகோபால், அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளில் ஆபாசமாக நடந்துகொண்டதாக மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ராஜகோபாலனை ஜூன் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து, ராஜகோபாலனை ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு ராஜகோபாலன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் இறுதி விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்பு நடைபெற்றது. அச்சமயம் காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜகோபாலன் மீதான விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது எனவும் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதனை எதிர்த்து வாதாடிய ராஜகோபாலன் தரப்பு வழக்கறிஞர், உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே காவல்துறையினர் ராஜகோபாலனை விசாரணைக்கு எடுத்து விசாரித்துவிட்டதாகவும், ஜாமின் வழங்கினால் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முடிவடையாத சூழலில் தற்போது ராஜகோபாலனுக்கு ஜாமின் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்
புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ ரூ.38,000 கோடி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதோ ரூ.276 கோடி: தேர்தல் நடக்கும் கர்நாடகத்துக்கு ரூ.3454 கோடி ஒதுக்கீடு; ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என முதல்வர், கட்சி தலைவர்கள் கண்டனம்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது
தினகரன்-சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைப்பு
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவு
ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!