சென்னை: தமிழகத்தில் உள்ள 11 வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும். தனியார் ரயில்களின் தெற்கு முனையமாக தாம்பரம் ரயில் நிலையத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில், 100 வழித்தடங்களில், 150 தனியார் ரயில்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, நெல்லை, மும்பை, மங்களூர், செகந்தராபாத், டெல்லி உள்பட 11 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் கட்டண நிர்ணயம் மற்றும் ரயில் நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரயில் நிலையங்கள் அருகில் உள்ள நிலங்கள் ஒதுக்குவது ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.