சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய துறைகளைத் தவிர மற்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலையின்றி மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். குறிப்பாக, பொதுமக்கள் வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை (இஎம்ஐ) வசூலிப்பதை, நிலைமை சீராகும் வரை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறுத்திவைக்க ரிசர்வ் வங்கி மூலம் அறிவிப்பு செய்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.