சென்னை செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தி பணியை விரைந்து தொடங்குங்கள்!: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்..!! Jun 01, 2021 ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி வளாகம் செங்கல்பட்டு மத்யமகா பொது வைகோ சென்னை: செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்யும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம், மக்களை பாதுகாக்கும் பணிக்கு அறைகூவலாக அமைந்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். தடுப்பூசி போடும் பணி நிறைவடைய நீண்டகாலமானால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். குஜராத், உத்திரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பீகார் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களுக்கு மட்டும் 85 விழுக்காடு தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மாநிலங்களுக்கு இடையே தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு நிலவி வருவதாகவும் வைகோ கூறியுள்ளார். தடுப்பூசி பற்றாக்குறையை போக்க செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக்கில் உற்பத்தியை தொடங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் தமிழக அரசின் முயற்சிக்கு ஒன்றிய அரசு துணை நிற்க வேண்டும் என்றும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது