சென்னை: கொரோனா தொற்றால் செய்தியாளர் உயிரிழந்தால் வழங்கப்படும் அரசின் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கிடும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் அரசு அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பெற்ற செய்தியாளர் கொரோனா நோயால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் இழப்பீட்டு தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.