சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடுதல் குழு அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமிப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த மார்ச் மாதம் தமிழக உயர்கல்வித்துறைக்கு சில பரிந்துரைகளை அனுப்பினார். அதன் பேரில் தமிழக உயர்கல்வித்துறை 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்தது. அதில் புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜெகதீஷ்குமார் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழக கூடுதல் செயலாளர் ஷீலாராணி சுங்கத், சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். .இந்நிலையில், தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.