ஆ.ராசா மனைவி உடல் அடக்கம்

பெரம்பலூர்: திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யின் மனைவி பரமேஸ்வரி  நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்திலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள்  கே.என்.நேரு, க.பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், ரகுபதி, மகேஷ் பொய்யாமொழி, சி.வெ.கணேசன், எஸ்.எஸ்.சிவசங்கர்,  மூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மங்குன் சாலையில் உள்ள பூர்வீக நிலத்தில், உடல் அடக்கம் செய்யப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இரங்கல் தெரிவித்து ஆ.ராசாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: