சென்னை: கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: அனைவரும் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். மிகவும் அத்தியாவசியமான விஷயத்துக்காக மட்டுமே வெளியே செல்லுங்கள். எப்போதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் டபுள் மாஸ்க் அணியுங்கள். தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தெளிவுபெற்று, உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.