சென்னை: தமிழ்நாடு அரசுப பணியாளர்கள் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை 2, தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப்பணிகள் 2013-2018, பணிக்கான நேர்முகத் தேர்வு தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. இந்த பதவிகளுக்கான நேர்முகத் தேர்வின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதேபோன்று 29.05.2019ல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள், 2008-2019, உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் (மின்சாரம்) (பொதுப்பணித்துறை), தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.