சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கு 2வது காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன்) சாலைவரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் அன்பழகன், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 90 சதவிகித ஆம்னி பேருந்துகள் கடந்த 1 வருடமாக இயங்காமல் உள்ளது. இந்நிலையில் கடந்த 10.4.2021 முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள முழு ஊரடங்கால், 100 சதவீதம் ஆம்னி பேருந்துகள் முற்றிலும் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.