சென்னை ஜூன் 2ம் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வாய்ப்பு!: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துவர் என்று எதிர்பார்ப்பு..!! May 29, 2021 ஆளுநர் பன்வரால் சென்னை: தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இடையே சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஜூன் மாதம் 2வது வாரத்தில் உரை நிகழ்த்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மே 11ம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. கூட்டத்தின் முதல் நாளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இரண்டாவது நாளன்று போட்டியின்றி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் அப்பாவு பதவியேற்றுக்கொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட சட்டமன்ற கட்சி தலைவர்கள் புதிய சபாநாயகர் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். இதன்பின்னர் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் உரை, முழுமையான நிதிநிலை அறிக்கை மற்றும் துறை ரீதியான மாநில கோரிக்கை விவாதம் நடத்தப்பட வேண்டும். ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதால் 2ம் வாரத்தில் ஆளுநர் உரை மட்டும் நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்பு, முழு நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கில் தனிமனித இடைவெளியுடன் நடக்க திட்டமிட்டுள்ளனர்.
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு