டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை திங்கள் கிழமை முதல் டெல்லி அரசு தளர்த்த உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, வரும் திங்கள் கிழமை முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். செய்தியளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறுகையில், “ டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கள் கிழமை காலை 5 மணி வரை உள்ளது. அதன்பிறகு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த உள்ளோம்.