சென்னை: காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரசால் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்து, தேசத்தை ஆளும் தலைமை கையறு நிலையில் இருப்பதையும், கண்டுகொள்ளாமல் திரும்பிக் கொள்வதையும் பார்க்கும்போது, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நிர்வாக புத்திசாலித்தனத்தை இழந்துவிட்டார் என்பது புரிகிறது. இக்கட்டான சூழலில் அவர் ஆட்சி செய்தபோது, அவருடைய கொள்கைகளும் செயல்களும் அதே விஞ்ஞான மனநிலையால் நிர்வகிக்கப்பட்டன. மலேரியா, சின்னம்மை, பாலியல் நோய்கள், தொழுநோய் உள்ளிட்ட நோய்களுடன் வீரமான, வெற்றிகரமான சண்டைகளை நிகழ்த்தியிருக்கிறார்.