பொன்னேரி: ஆசிரமத்தில் தங்கிப் படித்த 5ம் வகுப்பு மாணவன் மாயமானதால் அவனை யாராவது கடத்திச் சென்றுள்ளனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கற்பகாம்பாள் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் முருகன் (11). இவன் நந்தியம்பாக்கம் மாரியம்மன் நகரில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்து அப்பகுதி அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.