சென்னை கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்கள் கூடி விளையாட தடை!: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!! May 26, 2021 கொரோனா ஊரடங்கு உத்தரவு சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கூட வளாகங்களுக்குள் மாணவர்கள் நுழையவோ, விளையாடவோ அனுமதிக்கக்கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு போர்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்கள் கூடி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் ஆய்வின் போது பள்ளிக்கூட வளாகங்களில் சிறுவர்கள் குழுவாக விளையாடுவது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். குழுவாக விளையாடுவது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் இத்தகைய புகார்கள் எழாத வகையில் பணியாற்ற காவலர்களை அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவலர் இல்லாத பள்ளிகளில் யாரும் நுழைய முடியாத வகையில் நுழைவு வாயிலை மூடி வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அறிவிப்பு பலகையில் பள்ளிக்குள் நுழையவோ, விளையாடவோ அனுமதி இல்லை என எழுதி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்தில் மாணவர்களோ, மக்களோ கூடும் போது தகவல் தெரிவிக்க தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கும் தகவலை காவல் நிலையத்திலோ, கிராம நிர்வாக அலுவலரிடமோ தெரிவித்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளி வளாகத்திற்குள் தேவையற்ற வகையில் கூடுவதற்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு என்பதால் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்