முக்கிய செய்தி சென்னை காவிரி ஆற்றை தூர்வாரும் பணியை கண்காணிக்க 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழக அரசு ஆணை..!! May 26, 2021 TN அரசாங்கம் சென்னை: காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கழக செயலாளர் இறையன்பு விடுத்துள்ள உத்தரவில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், திருவாரூர் மாவட்டத்திற்கு கால்நலத்துறை செயலாளர் கோபால், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று அரியலூர், கரூர், புதுகோட்டை மாவட்டத்திற்கு ஏற்கனவே கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் சந்த் மீனா, விஜயராஜ் குமார், ஜம்பு கல்லோலிகர், ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் கூடுதலாக தூர்வாரும் பணிகளை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட அறிவிக்கப்படுகின்றனர். இந்த பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள், அந்தந்த மாவட்டங்களில் பணிகள் முடியும் வரை தங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் தூர்வாரும் பணிகள் தொடர்பாக அறிக்கையை தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை அரசு செயலாளர் முதல்வர் அலுவலகத்திற்கு அவ்வப்போது வழங்க வேண்டும் என்றும் இந்த பணிகளை பொதுப்பணித்துறை செயலாளர், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது ஜனநாயகத்தையும் நமது அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டம்: ராகுல் காந்தி
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!: குமரியில் கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை அமைப்பு : தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா
சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொதுதீட்சிதர் குழு தடுக்கிறது: ஐகோர்ட்டில் அறங்காவலர் குற்றச்சாட்டு
சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்குநேரி மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து..!!
தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி