சென்னை தனியார் பள்ளி முதல்வர் இன்று மீண்டும் ஆஜராக சம்மன்

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் வழக்கில் சென்னை பிஎஸ்பிபி பள்ளி முதல்வர் இன்றும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அசோக்நகர் மகளிர் காவல் நிலையத்தில் காலை 11 மணிக்கு கீதா கோவிந்தராஜன் ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. நேற்று பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலாவிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: