தமிழகம் முழு ஊரடங்கு எதிரொலி!: மதுரையில் 150 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி..!! May 25, 2021 மூர்த்தி மதுரோ மதுரை: மதுரை மாநகராட்சியில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே அடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் கிடைக்கும் வகையில் 100 ரூபாய்க்கு உரிய காய்கறி தொகுப்பு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 150 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனையை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். தேவைக்கு ஏற்ப கூடுதல் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், தேங்காய் உள்ளிட்ட 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 8428425000 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களின் விவரங்கள் தெரிவித்தால், வீடு தேடி மளிகை பொருட்கள் விற்பனை செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம்
கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில் வடமாநிலங்களை சேர்ந்த 2,486 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் ரத்து
குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல்
திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்துவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல்தான் பிரதமர் தோல்வி பயத்தால் பாஜவினர் பிரிவினைவாதம் பேசுகின்றனர்: துரை வைகோ பேட்டி
இந்திய சராசரி அளவை விட ஜெட்வேகத்தில் வளரும் தமிழ்நாடு பொருளாதாரம்: நடப்பு நிதியாண்டில் 10.69 சதவீதம் வரை அதிகரிக்கும், ஆய்வறிக்கையில் தகவல்
விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்