துரைப்பாக்கம்: தமிழகத்தில் நேற்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று முன்தினம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும், என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 7.20 மணி அளவில் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று வேதாரண்யத்திற்கு புறப்பட்டது. இதில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை ஆர்டிஓ அலுவலகம் அருகே வந்த போது, போக்குவரத்து துறை அதிகாரிகள் அதை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.