சென்னை: நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக, பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 4,993 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 6,60,384பேர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து பொதுமக்கள் பயணிக்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலின்படி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 1,500 பேருந்துகளும், மாநிலத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 பேருந்துகளும் இயக்கப்பட்டது.