திருவள்ளூர்: திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதியில் இருந்து 8 நாட்களில் கொரோனா நோயை பரப்பும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமலும் சுற்றி திரிந்தவர்களின் மீது 1691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரணமின்றி சுற்றி திரிந்தவர்களின் 1989 வாகனங்களை பறிமுதல் செய்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.