சென்னை: தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க தலைவர் அருட்செல்வன் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு எழுதியுள்ள கடிதம்:முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் ஒட்டு மொத்த புள்ளி விவரங்களை அனுப்புமாறு அந்தந்த உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர் அலுவலர்கள் உத்தரவிட்டு வருகின்றனர். எனவே, ஊரடங்கு நிலைமை சீரடைந்த பின் பணிகளை விரைந்து முடித்து ஆணையருக்கும், அரசிற்கும் பெருமை சேர்ப்போம்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்க தலைவர் வாசுகி கடிதம்:கொரோனா காரணமாக, பதவி உயர்வின் மூலமும், பணிமாறுதல் மூலமும் புதிய பணியிடத்தில் பணியாற்றும் இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலக பணியாளர்கள்,