தமிழகம் தீவிரமடையும் வைரஸ் பரவல்!: நாகர்கோவில் அரசு கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பு..!! May 21, 2021 கொரோனா மையம் கல்லூரி நாகர்கோவில் குமரி: நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகளுடன் புதிதாக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில், நாகர்கோவில் அரசு கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவிட் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிதாக கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 1,280க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் மரணமடைந்தனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 604 பேர், கோவிட் கவனிப்பு மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் 2,200 பேர், வீட்டு தனிமைப்படுத்தலில் 3,068 பேர் என 6 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மிதவை உணவக கப்பல் பயன்பாட்டுக்கு வர உள்ளது!
தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,000 கோடி மானியம்: தமிழ்நாடு அரசு விளக்கம்
உடல் உடை குறைப்பின்போது புதுச்சேரி இளைஞர் இறந்த விவகாரத்தில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது..? தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு