முக்கிய செய்தி சென்னை தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்க!: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!! May 20, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் புதுச்சேரி சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ரெம்டெசிவிர் மருந்தும், தடுப்பூசிகளும், ஆக்சிஜனும் மாநிலங்களுக்கு ஒதுக்கபடுகின்றன என தெரிவித்து அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆக்சிஜன் தேவையை பொறுத்தவரை தற்போது சமாளிக்கக்கூடிய நிலையில் உள்ளதாகவும், படுக்கைகளை அதிகரிப்பது, விரைவாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பது குறித்து மனுதாரரின் கருத்துக்களை அரசிடம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆங்கில மருத்துவம் இல்லாமல் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதேபோல் புதுவை அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது புதுவையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாவிட்டாலோ தமிழகத்தில் இருந்து வருபவர்களும் அனுமதிக்கப்படுவதால் வரும் வாரங்களில் 65 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதால் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தடுப்பூசி ஒதுக்கீடு மட்டும் குறைவாக இருப்பது ஏன் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மருந்து, தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினர். 2வது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரிவிக்க வேண்டும் எனவும், முடிவுகளை விரைந்து தெரிவிப்பதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் மோடி உரை : வாக்கு ஜிஹாத் குறித்தும் சாடல்!
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!