சென்னை: தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. இடையிடையே வெப்ப சலனம் காரணமாக வளி மண்டலமேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு சில இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். 23ம் தேதி வட மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். வட தமிழகத்தில் இயல்பு நிலையை விட கூடுதலாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரும்.