சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடமாடும் ஆக்சிஜன் பேருந்து வசதியை தொடங்கி வைத்தார் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி May 19, 2021 ராயபுரம் எம்எல்ஏ இட்ரீம் மூர்த்தி ஸ்டான்லி அரசு மருத்துவமனை சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக தினந்தோறும் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதில் மூச்சு திணறல் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் அதிக அளவு நோயாளிகள் வருவதால் சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதி கொண்ட பெட்டுகள் இல்லாமல் ஆம்புலன்சில் சிகிச்சை அளிக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது இதனை தடுக்கும் விதமாக அரசு பெட்டுகளின் எண்ணிக்கை படுக்கை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ராஜஸ்தான் சமூகத்தை சேர்ந்த சங்கத்தினர் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்தை வழங்கியுள்ளனர். இதனை ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி தொடங்கி வைத்தார்.முதல்வர் டாக்டர் பாலாஜி, மருத்துவ அதிகாரி டாக்டர் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ராஜஸ்தான் சமூகத்தை சேர்ந்த சங்கத்தினர் உடன் இருந்தனர். இந்த பேருந்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் 10 பேருக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இவர்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காதபோது இந்த பேருந்தில் தற்காலிகமாக சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் படுக்கை வசதி கிடைத்தவுடன் வார்டுக்கு மாற்றப்படுவார்கள். மேலும் 10 சொகுசு பேருந்துகள் மருத்துவமனைக்கு வர இருப்பதாகவும் இதனால் ஓரளவிற்கு ஆம்புலன்சில் காத்து கிடப்பவர்களுக்கு இந்த பேருந்து மூலம் அந்தக் கவலை இனி வேண்டாம் என கூறினார். இதில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பார்த்துக் கொள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக வரும் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முழுக்க முழுக்க கொரோனா சிகிச்சை மையமாக மாறியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி தெரிவித்தார். இனி கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு படிபடிப்பாக குறையும் என கூறினார்.
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது