முக்கிய செய்தி சென்னை புதிய அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!! May 18, 2021 முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் சென்னை: புதிய அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் மூலம் ஜூன் 3 அன்று ரூ.4000 நிவாரணம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. அதன்படி முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக ரூ.4000 நிவாரணத் தொகை அளிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து, முதல் கட்டமாக இந்த மாதமே ரூ.2000 அளிக்கப்படும். இந்த மாதம் 16ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரூ.42.99 கோடி செலவில் மே மாதத்தில் இருந்து முதல் தவணையாக ரூ.2000 நிவாரணம் வழங்குவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னதாக 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 பேருக்கு மட்டுமே கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கக்கூடிய அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கவுள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் : வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!
கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன்.. பிரதமர் மோடி, ஒன்றிய அரசு, ED முகங்களில் விழுந்த அறை என அரசியல் தலைவர்கள் விமர்சனம்!!
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் :தேர்தல் பரப்புரைக்கு அனுமதி, முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபட அனுமதி மறுப்பு!!
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 13 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம்
வாக்கு சதவீதம் குறித்த தரவுகளில் தாமதம் இல்லை; எப்போதும் போல தகவல்கள் வெளியிடப்படுகின்றன : இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்
சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்: முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியீடு
தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் மன்றாடுகிறார் மோடி : உ.பி.யில் ராகுல், அகிலேஷ் கூட்டாக பிரச்சாரம்
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ராட்வீலர், உள்ளிட்ட 23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது
அதானி, அம்பானியிடம் டெம்போவில் கருப்பு பணம் விவகாரம்.. சிபிஐயின் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் : ப.சிதம்பரம் விமர்சனம்
தமிழகத்தில் தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள் : பீகாரில் 20 மாணவர்களுக்கு முன்கூட்டியே விடையுடன் கூடிய வினாத்தாள் கொடுத்தது அம்பலம்!!