கொரோனா தடுப்பு நடவடிக்கை: பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன்படி, பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். காணொலி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரகிறது. நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் பற்றி ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனையில் நடத்தி வருகிறார். ஆலோசனையில் மாநில முதல்வர்கள், அதிகாரிகள், சுகாதாரச் செயலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: