புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதியில்லாமல், ஆக்சிஜன் சிலிண்டருடன் தரையில் படுத்துக் கொண்டும், இறந்தவர்களின் சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டும் சிகிச்சை பெறும் வீடியோ வைரலானது. இதையடுத்து, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அந்த மருத்துவமனைக்கு திடீர் ஆய்வுக்கு சென்றார். கவச உடையணிந்து ஒவ்வொரு வார்டாக சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலர் அருண், மருத்துவ கல்லூரி இயக்குனர் உதயசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், கவர்னர் தமிழிசை கூறுகையில், தினமும் ஆக்சிஜன் படுக்கையை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ, அந்தளவுக்கு உயர்த்த முயற்சி செய்து வருகிறோம். இங்கு கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படுகிறது.