கொரோனா நிவாரண நிதியாக பொதுப்பணி, நீர்வளத்துறை பொறியாளர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு: பொறியாளர்கள் சங்கம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை பொறியாளர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்து இருப்பதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்க தலைவர் பிரபாகர், மாநில பொதுச்செயலாளர் முருகன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களின் வேண்டுகோளை ஏற்று கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்திட தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் பணியாற்றும் உதவி பொறியாளர் முதல் தலைமை பொறியாளர் வரை உறுப்பினராக உள்ள எங்கள் சங்கங்களின் சார்பாக பணிவுடன் கோருகிறோம். மேலும் தங்கள் தலைமையின் கீழ் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்கிட உறுதி கூறுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: