சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் முகமது யூசுப். இவர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி, தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். தொற்றின் தீவிரம் அதிகமானதால் சென்னை மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.