ஊத்துக்கோட்டை: தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவிவருவதால் அவற்றை தடுக்க தமிழக அரசு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஊத்துக்கோட்டை காவல்துறை சார்பில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமார், எஸ்ஐ வரதராஜன் மற்றும் சிறப்பு எஸ்ஐ முரளி ஆகியோர் ஊத்துக்கோட்டை அண்ணாசிலை 4 முனை சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அருகில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.