கொரோனா நிவாரணம்...முதல் தவணையாக ரேஷன் கடைகளில் ரூ.2000 வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்

சென்னை: கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை 2000 வழங்கும் பணி தொடங்கியது. கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து முதல் தவணையாக இந்த மாதம் 2 ஆயிரம், அடுத்த மாதம் 2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து, கொரோனா நிவாரண நிதி வழங்கும் வகையில் கடந்த 10-ம் தேதி  2.07 கோடி பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் 10-ம் தேதி தொடங்கி வைத்தார். எனவே வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் கொரோனா வைரஸ் நிவாரண முதல் தவணைத் தொகை எந்த புகாருக்கும் இடமின்றி வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கூறியிருந்தார். 

Related Stories: