லாரிகள் காலாண்டு வரி செலுத்த கால நீட்டிப்பு வழங்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: முழு ஊரடங்கில் ஓடக்கூடிய பொருள் போக்குவரத்து வாகனங்கள், கட்டுமான வாகனங்களுக்காக பழுது பார்க்கும் கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்க வேண்டும். காலாண்டு வரி கட்டுவதற்கான கடைசி தேதி மே 15ம் தேதி என்பதை  தமிழக அரசு சலுகை வழங்கி கால நீட்டிப்பு செய்து உத்தரவு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: