சிறுத்தை தாக்கி பசுமாடு பலி

மஞ்சூர்: மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவர் சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை இவரது பசுமாடு ஒன்று குடியிருப்பை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று பசுமாட்டின் மீது பாய்ந்து அதை கடித்து குதறியது. இதனால் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

Related Stories: