பழம், மலர் மற்றும் நாட்டு மருந்து விற்பனைக்கு அனுமதி: முதல்வருக்கு விக்கிரமராஜா நன்றி

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அளித்த கோரிக்கையை ஏற்று, பெருந்தொற்றால் பொது மக்கள் பாதிக்காத வண்ணமும், அதே சமயம் பழம், மலர், மற்றும் நாட்டு மருந்துக்கடை வணிகர்களின் வாழ்வாதாரமும் பாதிக்காத வகையில்,  ஆழ்ந்த ஆலோசனையின்படி, மேற்படி கடைகளை பகல் 12 மணிவரை திறந்திருக்க அனுமதி அளித்திருப்பதற்கு முதல்வருக்கு பேரமைப்பு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

கலந்தாய்வின்போது, இனிவரும் காலங்களில் பேரமைப்பு பிரதிநிதிகளை அழைத்துப்பேசி தீர்வு காண்போம் என்று உறுதிமொழி அளித்த தமிழக முதல்வர் தமிழக அனைத்து வணிகர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பேரமைப்பு  மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

Related Stories: