சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் நேற்று பகல் 11.50 மணிக்கு சென்னை திரும்பினார். கடந்த ஆண்டு இறுதியில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. அப்போது படப்பிடிப்பு குழுவினரில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்திற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், நெகட்டிவ என்று வந்தது. ஆனாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த டிசம்பர் 27ம் தேதி ஐதராபாத்திலிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.