சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு பிச்சாண்டி: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவைத் தலைவராக அப்பாவு, துணைத் தலைவராக பிச்சாண்டி ஆகியோர் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுவர் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: 12ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், திமுக சார்பில் பேரவைத் தலைவராக நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு, துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி போட்டியிடுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: