சென்னை: கொரோனா தொற்று பாதிப்பால் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் நேற்று இறந்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் உற்பத்தி தொழில் நுட்பத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சக்திநாதன். இவர் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல்வராகவும் இருந்தவர். தற்போது அவர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உற்பத்தி தொழில் நுட்பத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.